காதல்

அழகான உதிரிப்பூக்கள்
அவற்றைப் பாங்காய்க் கோர்த்திட
உருவாகும் வண்ண நறும்மாலை ன் வடிவழகைக் கண்டு
அழகழகாய் பல பல உதிரி சொற்கள்
அவற்றை நேர்த்தியாக கோர்த்து
புனைந்திடுவான் கவிதையாய்
சிறந்த கவிஞன் -அதுபோல பெண்ணே
உந்தன் வடிவழகைக் கண்டு மயங்கிய நான்
உந்தன் உருவில் நீ தாங்கிய ஒவ்வொரு
அழகு அங்கமும் ஒவ்வோர் அழகு பூவாய்க் காண
அதைக் கோர்த்து தங்க பதுமைப்போல்
பெண்ணாய் உன்னை சமைத்த அந்த
பிரமனின் கைவண்ணத்தை எண்ணி எண்ணி
வியந்தேன்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Feb-19, 1:39 pm)
Tanglish : kaadhal
பார்வை : 200

மேலே