நிலவும் அவனும்

ஒவ்வொரு பிறைநிலவிலும் உன் நினைவுகள்..!
அன்றாட உரையாடல்கள்..,
இமைகளின் எதிரில் விலக மறுக்கிறது..!
நீயும் நானும் ஒருமித்து பயணித்த நாட்களில்..,
நிலவின் புன்னகையும் சுடராய் பிரகாசித்தது..!
இன்று..,
நான் மட்டும் பயணிக்கிறேன்..,
பாதைகள் அறியாமல்..,கார்மேகக் கூட்டங்களுடன்..!
உன் வரவை எதிர்நோக்கியே நகர்கிறது..,
என் பாதைகளின் தேடல்..!
நிழலாயேனும் நீ இல்லை,இருந்தும் பயணிக்கிறேன்..,
நீ அளித்துச் சென்ற நம்பிக்கையில்..!
பாதைகள் அறியாமல் பயணிக்கிறேன்..,
உன் நினைவுகளின் நம்பிக்கையில்..!
அன்றாட நிலவோ உன் நினைவுகளை எழுப்புகிறது..!
துயிலும் முன்னர்..!
'என்னவள் என் நினைவை பத்திரப்படுத்தி வைத்துள்ளாளா?'
என்ற உன் வினவலுக்கு பதில் வினவி..!
என்னென்று நான் கூற..?
நொடிப்பொழுதும் மறையாத உன் நினைவலையின் வேகத்தையா?
அல்லது..,
என் காத்திருப்பு உன் வருகை கணங்கள் வரை நீளும் என்பதையா?
உன் புன்னகையில் நான் புதைந்துள்ளேன் என்றா?
உன் இடைவெளியால் என் வினாடிகள் யுகமாய் உருமாறியதையா?
அதற்குள் விடிகிறது பொழுது..!
அது என் யோசனைகளுக்கும் நிறைவு..!
மீண்டும் காத்திருக்கிறேன் பிறைநிலவுக்காய்..,
என்னவனின் நினைவுகளில் சற்றே நனைய..!
என் காலங்கள் கடந்து கொண்டுதான் செல்கிறது..,
நினைவுகளோடும்..,இரவில் மலரும் நிலவுடனும்..!
'உன் வருகைதான் வேண்டுமென்பதில்லை..!'
நிலவோடு,
உன் புன்னகையும் என்னில் பத்திரம்..!

எழுதியவர் : சரண்யா (10-Feb-19, 11:31 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : nilavum avanum
பார்வை : 335

மேலே