வீரவணக்கம்

இரத்தமும் கொதிக்குது
இதயமும் வெடிக்குது
கதறிடும் தளிர்கண்டு
கண்ணீரில் நம்நாடு !

ஈரமிலா நெஞ்சமடா
ஈனப்பிறவி நீயடா
கொலைவெறி ஏனடா
கொடும்பாவி நீயடா !

எங்களைக் காத்தவர்
இன்னுயிர் நீத்தவர்
தேசநலன் நினைத்தவர்
தாக்குதலில் மாண்டவர் !

இந்தியராய் இணைந்து
எதிரிகளை வெல்வோம்
உயிர்தந்த தியாகிகளை
உள்ளவரை மறவோம் !

கண்ணீர் அஞ்சலியுடன்
வீரவணக்கம் செலுத்துகிறேன் !

பழனி குமார்
16.02.2019

எழுதியவர் : பழனி குமார் (16-Feb-19, 7:02 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 556

மேலே