அழகு

கார்மேகங்களும் கரைந்து போகும் உன்
கருவிழி பார்வையில் .....
பூக்கா என் பூந்தோட்டங்களும் பூத்து குலுங்கும்
உன் புன்னகையில்......
சுட்டெறிக்கும் சூரியனும் குளிர்ந்து போகும்
உன் இசையினால்.....
பிறைமதியும் முழுமதியாகும்
உன் முகத்தை பார்க்க.....
பௌர்ணமியிலும் வெண்ணிலா தெரியவில்லை
கண்ணே உன் இன்முகத்தை பார்த்தாலே
தென்றலும் தேடிச் செல்கின்றன
உன் தேகத்தை தொடுவதற்க்காக......
காதல் இல்லா என் கல்நெஞ்சமும்
கரைந்து போய் விட்டன உன்
கலைசிறந்த அழகை பார்த்து...

எழுதியவர் : தென்னரசி (25-Feb-19, 11:40 pm)
Tanglish : alagu
பார்வை : 493

மேலே