மௌனம்
அலசி அலசிப் பார்க்கிறேன்
பேசிய வார்த்தைகளையும்
பேசாத மௌனங்களையும்
அர்த்தம் புரியவே இல்லை
மௌனித்திருந்த
பொழுதுகளெல்லாம்
சொல்லிக் கொண்டது
ஒன்றே ஒன்று தான்
நீ தான்
என் நூலகம்
என் மௌனமெல்லாம்
உனக்கான கௌரவம் தான்
பேசிப் பேசி
பார்த்து பார்த்து
நேசம் கொள்கிறேன்
அதே கண்களில்
விழி அகல பார்த்த
உன் முகம் நெஞ்சமெங்கும்
நிறைந்திருக்க - பார்வையெல்லாம்
உன் மௌனமே தான்
நீ தான்
என் இதயம் கண்ட காயங்கள்
வாய் மூடி அழுவதும்
உன்னால் தான்
நேசம் உணரும்
ஒரு நொடி உலகம்
சற்று தூரமாகிப் போக
விழி நீரும் மௌனம் தான் .