என்னுள் பெண்மை

உன்னைப் பற்றி நினைத்தால் விண்ணிலும் விளைச்சலடி
நீர் துளிகளின் குடும்பம் வீழ்தெழுந்து குதிக்குதடி
பெண்ணைப் போற்றி எழுத என் பேனாவும் கலங்குதடி
என் அன்னை போல் பலரும் கண்முன்னே வந்தபடி

நீ
உயிரின் கணம் தெரிந்தவள்
உறவின் சுகம் அறிந்தவள்
பிறரின் நிலை உணர்ந்தவள்
அந்நியனுக்கும் அன்பு புரிபவள்

உன்பால் நான் கற்றவையே
உளமார சிரித்தலும்
பிறரை அரவணைத்தலும்
அயராது உழைத்தலும்
சுவைக்கொண்டு சமைத்தலும்

என் தாய் முதல் முன்னால் காதலிகள் வரை
சிறுமிகளின் தொடங்கி பாட்டி வரை
சகோதரி முதல் சிநேகிதி வரை
நான் சந்தித்த ஆச்சரியமான பெண்கள் அனைவருக்கும்
என்னுள் இருக்கும் பெண்மையைச் சமர்ப்பிக்கிறேன்

எழுதியவர் : ரா.சா (8-Mar-19, 4:39 am)
சேர்த்தது : ராசா
Tanglish : ennul penmai
பார்வை : 566

மேலே