தவறிவிட்டேன் தோழமையே

உனை பற்றி எழுதுவதற்கு
தவறிவிட்டேன் தோழமையே

நீ தோள் கொடுக்க மறந்தாயே
என் துயரமான நாட்களிலும்

அதனால்தான் என்னவவோ
எழுதுவதற்கு தவறிவிட்டேன்

என்றும் நீ உடன் இருப்பாய்
என்றே நான் எண்ணி வாழ்ந்தேன்

தவறினை உணர்ந்த பின்பும்
மன்னிக்க மறுப்பதேனோ

என்றேனும் என் நினைவு
உனக்குத் தான் வந்ததுண்டா

வந்தால் நீ அழைப்பு விடு
தொலைபேசி வாயில் போதும்

உடன் ஓடி வந்திடுவேன்
உன் துயரத்தில் துணை நிற்க !!!

இவள்
விஜயலட்சுமி...

எழுதியவர் : கீதாவின் மகள் (9-Mar-19, 3:53 pm)
சேர்த்தது : கீதாவின் மகள்
பார்வை : 910

மேலே