தமிழ் மொழியே மூச்சுடா

தமிழர் மீது எத்தனை
எத்தனை கோபம்.
தமிழ் மொழி உரைப்போருக்கு
எத்தனை விதமான சாபம்.
தமிழன் அத்தனையும்
பொறுக்க வில்லையா ?
தமிழால் அதை அடித்து
நொறுக்க வில்லையா ? .

சர்வதேச மட்டத்தில் இன்றும்
தமிழை மதிக்க வில்லையா?
அதை அவமதித்தோரும் கேட்டு
ரசிக்க வில்லையா ? .

தமிழ் வீரத்திலகம்
கட்டபொம்மனின் வரலாறு
உலகம் எங்கும் பரவவில்லையா ?
திருக்குறளை வேற்று
மொழியில் வகுக்கவில்லையா ?
ஈழத்து மண்ணிலும் தேசியகீதம்
தமிழ் மொழியில் ஒலிக்க வில்லையா?.

அழிக்க முடியாது தமிழையடா.
அழிந்து விடாது
தமிழனின் கொள்கையடா.
கூலியாக வாழ்ந்தாலும்
தலை குனியாத தமிழனடா.

மறைந்து இருந்தாலும்
கதிரவன் போல் ஒளி
கொடுக்கும் தமிழ் மொழியடா.
ஆய்வு நடத்தியே அறிந்த விடை
ஆதி மொழி தமிழ் மொழியடா.

என்றும் மரவு
காப்பவன் மரத்தமிழனடா.
மொழிக்கு எல்லாம் தாய்
மொழி தமிழ் தானடா.

முறத்தால் புலியை விரட்டியவள்
தமிழச்சி தானடா.
பிறமொழி உரைத்து வயிறு
வளர்த்தாலும் தமிழனுக்கு
தமிழ் மொழி மூச்சுடா.

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (12-Mar-19, 6:39 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 119

மேலே