எல்லைச்சாமிகளுக்கு வண்ணத்தில் ஒரு பாடல்

வண்ணப் பாடல்
************************
சந்தக்குழிப்பு
******************
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன . . . . . தனதானா

குற்றத்தையொ டுக்கிக் கழுவிட
அச்சத்தினை விட்டுப் பகைவரின்
கொட்டத்தை யடக்கிப் பதிலடி . . . . . யளியாரோ ?
குட்டிக்குனி வித்துக் குழலது
சுட்டுச்செலும் பச்சைத் திமிரொடு
கொத்தித்தசை வெட்டிப் பலியிட . . . . . முனைவாரே !

அற்றைக்கவன் சுட்டுக் கொலவுட
லெட்டிச்சித றிப்பற் பலவிடம்
அக்கக்கென வெட்டித் தொலைவினில் . . . . . விழுமாறே !
அற்பத்தனம் மிக்குக் கயவரின்
நச்சொத்தவெ றிக்குத் துணிவுடன்
அத்திக்கையெ திர்த்துச் சமரிட . . . . . விரையாரோ ?

சுற்றத்தைவி டுத்துத் தெளிவுடன்
பற்றிக்கொள நட்புச் சிறகொடு
துக்கத்தைம றைத்துக் கனலென . . . . . எழும்வீரா!
துட்டத்தைந சுக்கப் புயலென
நுட்பத்தொடு திட்டத் தினிலவர்
சொக்கத்திறம் மக்கட் புரிவதும் . . . . . மெளிதாமே !

எற்றத்துடன் வெற்றிப் பரிசினை
மட்டற்றவு ழைப்பிற் கனிவுடன்
இற்றைக்கவர் பெற்றுத் தருவது . . . . . மகிழ்வோடே !
இட்டத்துட னிப்பொற் படையினை
ஒப்பற்றவ ணக்கத் தொடுமனம்
எட்டுத்திசை மெச்சப் பணிவொடு . . . . . நினைவேனே !!

சியாமளா ராஜசேகர்
( எல்லையில் பணியாற்றும் வீரர்களுக்குச் சமர்ப்பணம் )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Mar-19, 12:47 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 33

மேலே