அவனும் அவளும்

அவனும் அவளும்
வேறு வேறல்ல
விழிகள் இரண்டாவதால்
பார்வை இரண்டல்ல...

உணர்வுகள் ஒன்றிவிட்டால்
வலிகள் உணரப்பட்டால்
வேறுபாடுகள் மதிக்கப்பட்டால்
தவறுகள் புரிந்துகொள்ளப்பட்டால்
மதிப்பிடும் நீதிபதியாகாமல்
அவளி(னி)ன் பாதியானால்
சார்ந்திராமல் இணைந்திருந்தால்
உறவில் பொய்க்கு இடமில்லை.

பொய் இடம் பெறுமாயின்
ஏமாந்து கொண்டிருப்பது
அவனோ அவளோ அல்ல...
பொய் உரைத்த மனமும்
ஏற்படாத உறவும்...
~கிருஷ்ணநந்தினி

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (17-Mar-19, 8:59 pm)
சேர்த்தது : கிருஷ்ணநந்தினி
Tanglish : avanum avalum
பார்வை : 266

மேலே