முடிவிலியாய் நீளாயோ

முடிவிலா எண்ணம் போல்
முடிவிலியாய் நீளாயோ...
நாளும் கை கோர்த்து
முடிவில் வாசல் சேர்க்கிறாய்..
சாலையே!
வாசல் இல்லா உலகுக்கு
கூட்டிச்செல்வாயா என்னை...
பந்தபாச ஊரை விட்டு
வெகுதூரம் செல்வோமே...

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (17-Mar-19, 10:35 pm)
சேர்த்தது : கிருஷ்ணநந்தினி
பார்வை : 144

மேலே