வட நாட்டு ஏழை தம்பிகள்

வட நாட்டு ஏழை தம்பிகள்.

கால் ஜான் வயிற்றுக்கு
இரவு பகல் பாராமல்
இயந்திரங்கள் போல் உழைக்கும் மனித இனம்
இமைகள் மூடாமல் உழைக்கும் மானுட இனம்
சுகாதாரமற்ற இடத்தில், சுதந்திரமில்லாமல்
இரும்பு கூடாரத்தில்
இரவு முழுக்க கொசுவார்
இரக்கம் இல்லாமல் இவர்கள் இரத்தம் குடிக்க
இன்னல்கிடையே ஏதோ தூக்கம்
இவர்கள் வேற்று கிரகத்தில் வந்த மனிதர்கள் அல்ல
இந்திய தாயின் வடநாட்டு ஏழை பிள்ளைகள்
இது தான் சுதந்திர இந்தியாவின் சமத்துவம்
இது தான் சுதந்திர இந்தியாவின் சகோதரத்துவம்
இவர்கள் அறியாமையை அதிகார துஷ்பிரயோகம் செய்யும் முதலாளித்துவம்
இதில் மனித நேயம்
மானுட தர்மம்
எங்கே போச்சு
உண்மை நிலை என்ன
இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும்
நாம் எல்லோரும் சூழ்நிலை கைதிகளா அல்லது
எல்லோரும் சுயநல நோய் தாக்கிய நோயாளிகளா .
- பாலு.

எழுதியவர் : பாலு (20-Mar-19, 4:11 pm)
சேர்த்தது : balu
பார்வை : 69

மேலே