பகவத்கீதா வெண்பா பக்தியோகம் 5 சுலோகம் 10 11

10 .
என்பொருட்டு கர்மத்தை செய்வோனாய் நீயிரு
எஞ்ஞானத் தின்பயிற்சி ஆற்றலும்இல் லாவிடினும்
என்பணிஉன் னைஉய்விக் கும் !

11 .
இப்பணியும் உன்னால் முடியாது போய்விடின்
தன்னடக் கம்பயில் என்னைச் சரணடை
கர்மபலன் என்னிடம் தா !

-----கீதன் கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-19, 4:12 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே