கன நொடி கொடுக்கும் இன்பமே

உள்ளிழுக்கும் காற்றில் உள்ளதடா உயிர்
ஒரு போதும் அது உனக்கு சொந்தமில்லையடா
பல்லில் உள்ள நிறம் போல காற்றும் கொண்டிருந்தால் உலகத்தோரின் வாழ்வை கண்டு மகிழ்ந்திடலாம்

பூமி கோள் நடுவில்லுள்ள நெருப்பு குழம்பைபோல்
இந்த பூத உடலிலும் பெரும் நெருப்பு உள்ளதடா
பித்தம் மேம்படின் அது பெரியதாய் எரியுமடா
உன்னை நீ அறிந்தால் அதன் வேகம் குறையுமடா

காணும் காட்சியெல்லாம் கண்டவருக்கு சொந்தமில்லை
காணததை கண்டு அறிவதே வாழ்வின் எல்லை
கன நொடி கொடுக்கும் இன்பமே உலகின் தொல்லை
நீ காணும் இன்பம் வேறு பொருளில் வைத்ததே இறைவன் கொள்கை

ஆழ தேடினும் ஆர்ப்பரித்து பறந்து தேடினும்
அங்குள்ளதே நம் கையில் அகப்பட்டு கிடைக்கும்
ஆனால் நம் மனமோ கற்பனைக்குட்பட்டு தேடி அலையும்
களைவோம் தெளிவோம் சிறந்து வாழ்வோம்.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (27-Mar-19, 7:05 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 63

மேலே