வழி தெரியா வாழ்க்கை -தத்துவம்

தீயைக் கண்டாலும் அஞ்சாது
தண்ணீருக்கும் அஞ்சாது
நல்லது யாது தீயது யாது
என்றொன்றும் அறியாது
அமிர்தமும் நஞ்சும்
அதன் கண்களில் ஒன்றே
பொய் மெய் என்ற வேற்றுமையும்
அறியாது எல்லாம் அதன் கண்களில்
மெய் தான்
இந்த நிலையில் இருந்து
இப்போது இந்த நிலைக்கு
வந்துவிட்டோமே என்று
நினைத்தேன் சிந்தித்தேன்
சிந்தனையும் சீரடைந்தது
ஆம் நான் நினைத்ததெல்லாம்
அந்த கள்ளமில்லா குழந்தைப் பருவம்
குழந்தையும் தெய்வமும் ஒன்று
என்று எல்லாரும் உணர்ந்த அந்த
தெய்வ நிலை …………
இதைத் தாண்டி வந்து
தெய்வத்தைத் தேடுகின்றேன்
நீதி தேடி அலைகிறேன்
உண்மையைத் தேடி அலைகிறேன்
இறைவா இப்படி என்னை அலையவிட்டு
என்னைவிட்டு பிரிந்து போன நீ
சிரிக்கின்றாய், குழந்தையாய்
குட்டி கண்ணனாய் என் முன்னால்
என்னைவிட்டு ஏன் பிரிந்தாய்
ஏன் குழந்தைப் பருவத்திலேயே
இந்தப் பருவத்தில் உனக்கும்
எனக்கும் இடையே பெரும் மாயை
அதை எதிர்நீச்சல் போடா தெரியலையே
வழிகாட்டுகண்ணா , உனைக் காண

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-Mar-19, 4:12 pm)
பார்வை : 179

மேலே