காதல் பார்வை

காந்த கண்களினால் என்னை கவர்ந்தவளே
கன்னக்குழியின் அழகினால் என்னை உன்னிடத்தில் கடத்தியவளே
தேன்னுரும் உதட்டினால் என் உலகத்தையே மறக்கடித்தவளே
காற்றிலே ஆடும் உன் கரு கூந்தல்
என் மீது மோத நான் மோட்சம் அடைவேன்னடி
உன் காலடி சுவடுகளை பின்பற்றியே என் திசைகள் யாவும் செல்கின்றதே
தன்னிலையை மறந்து உன்னையே உயிராக நினைத்து வாழ்கிறேன்
ஒருமுறை திரும்பி காதல் பார்வை பார்த்தால் என்ன
கண்மணியே காலம் உன் காலடியில் நான் கிடப்பேன்
மவுனத்தை விட்டு கண் ஜாடையில் காதலை சொல்லு
இரு உடலில் ஓர் உயிராய் நாம் இன்றியமையாமல் வாழ்ந்திருப்போம்

எழுதியவர் : M. Chermalatha (1-Apr-19, 7:47 pm)
சேர்த்தது : M Chermalatha
Tanglish : kaadhal parvai
பார்வை : 349

மேலே