வா குளிக்கலாம் அழகே

மொட்டு விட்ட
நெத்தி பொட்டு...
கண்ணம் தொட்டு
நெஞ்சில் ஒட்டு...

நீ போகும் பாதையிலே
மடல் விரித்து தடம் காட்டும்
மயக்கம் சேர்க்கும்
மலர் வண்டுகள்...

நீ தத்தி தாவி குதிக்கையிலே
மேகம் சாரல் தூவி வீசுமடி...
தென்றல் தூண்டில் போட்டு
என்னிடம் தான் சேர்க்குமடி...

வெண் நிலாவும்
வெட்கம் நீங்கி...
மஞ்சள் தேச்சி குளிக்குமடி
வெண்புறாவும் சிறகுகள் நீட்டி
திரை போட்டு காக்குமடி...

வா குளிக்கலாம் அழகே...

என்றும் அன்புடன்,
மதன்

எழுதியவர் : மதனகோபால் (1-Apr-19, 7:56 pm)
சேர்த்தது : மதனகோபால்
பார்வை : 1010

மேலே