காத்திருப்போம்

தோகைமயிலின் குஞ்சுகளும்
தோற்றத்தில்
கோழிக்குஞ்சுகள் போலிருக்கும்..

வேறுபாடு தெரிவதில்லை
பாய்தோடும்
பரியின் குட்டிக்கும்,
பொதிசுமக்கும்
கழுதையின் குட்டிக்கும்..

வளர்ந்தபின்தான்
வருகின்றன பேதங்கள்-
அழகாய், அல்லதாய்..

ஆனாலும்
ஆபத்தானவன் மனிதன்,
பிள்ளையாயிருக்கையில் வராத
கள்ளமெல்லாம்
வந்துவிடுகிறது வளர்ந்ததும்..

தமக்குள்ளே
பேதங்கள் காட்டித்
தன்னினத்தையே அழிக்கும்
ஒரே மிருகம்-
மனிதன்தான்..

மாறுவானா,
மாறவேண்டும்..
காத்திருப்போம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-May-19, 7:25 am)
பார்வை : 106

மேலே