அன்புள்ள அப்பா

# அன்புள்ள அப்பா #
என் இரு விழி ஓரம்
கண்ணீர் துளி...

அது நீ இல்லா
உலகில் எதிரொளி...

நீ இருந்த போது
உனக்காகவும் துடித்த
என் இதயம் ...

நீ இறந்த போது
உனக்காக மட்டுமே துடிக்கிறது
உன் நினைவுகளுடன்...

அன்பை கோபமாக
மட்டுமே வெளிபடுத்த தெரிந்த
வெள்ளைப் புறா நீ...

தண்டசோறு என்ற
வார்த்தையில் உன்
அன்பின் ஆழம் புரிய
அரை நூற்றாண்டு ஆனது...

நீ புரியாத புதிர்
உன்னை புரியாதர்களுக்கு ...

நீ பொக்கிசம்
உன்னை புரிந்தவர்களுக்கு

என் ஆசைக்காய்
உன் ஆசை மறந்தாய்...

என் தேவைக்காய்
என் தேவை குறைத்தாய்...

என் வாழ்க்கைக்காய்
உன் வாழ்க்கையை விதைத்தாய்...

எப்படி படிக்கிறேனு ஒரு
வார்த்தை கேட்டதுல்லையே…

என்மீது நம்பிக்கையா இல்லை
நீ வணங்கும் தெய்வத்தின் மீது
நம்பிக்கையோ தெரியவில்லை...

உன் கரம் பிடித்து நானும்
என் கரம் பிடித்து நீயும்
நடந்த நாள்கள் மீண்டும் வருமா...

உன் பின்னால் ஓடிய
தருணங்கலளில் எல்லாம்
நான் உயிர் பெற்றேன்...

ஆனால் நீ என் பின்னால்
ஓடிய தருணங்களில் உயிர் பிரிந்தாய் ...

என்று எண்ணுகிற போது
என் குற்ற உணர்ச்சி தினமும்
என்னை கொள்கிறது...

என்னதான் இருந்தாலும்
உன் வாழ்க்கை என்ற பல்கலைக்கழகத்தில்
நான் என்றுமே உன் பிரியமான மாணவன்(மகன்)
டேவிட் சாமுவேல் ராஜா...

எழுதியவர் : டேவிட் சாமுவேல் ராஜா... (6-May-19, 12:16 pm)
Tanglish : anbulla appa
பார்வை : 46

மேலே