நதிக்கரை
ஓடும் நதிக்கு துணையாய் மற்றும்
அத்துமீற அடக்கிடவும் கரைகள்
கரையில நதி காட்டாறு -அதுபோல்
வாழ்க்கைக்கும் ஒவ்வோர் மனிதனுக்கும்
தேவை கரைபோல் ஓர் துணை அதுவே
அவனுக்கு மனைவி அவளுக்கு கணவன்
ஒருவருக்கு ஒருவர் கட்டுப்பாட்டை மீறாது
செவ்வனே வாழ்க்கை நடாத்த.