திருந்தாதோ சமுதாயம்
ஆணவச் செயலா?—இல்லை
ஆற்றாதவர் அழுத கண்ணீரா?
ஆற்றுவெள்ளமென பெருகி
துன்பம் இழைத்தோரை
துடைத்தொழிக்க என்ன காரணமோ!
துட்டருக்கு இல்லை சொந்தபந்தம்,
துடிக்கின்ற நெஞ்சமும்
வடிக்கின்ற கண்ணீரும்
உள்ளத்தின் காயத்தை—உயிர்
உள்ளவரை மறக்குமோ!
ஓடுகிற வெள்ளம்
ஒருநாளும் ஓயாது
அழிக்காமல் அடங்காது
உரிமையோ!, பகைமையோ!
உயிரை எடுப்பது முறையோ?
கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரையாதோ!
அகத்தீயை அழித்து
ஆக்கவழி தேடினால்
அறம் தான் வெல்லாதோ!
தேசத்தின் நலம் காக்க
தீவிரவாதத்தை ஒழிப்போம்—மீண்டும்
தீபாவளி கொண்டாடுவோம்,
தனிமனிதன் திருந்தினால்
திருந்தாதோ சமுதாயம்!