பொட்டுக் கண்கள் கொண்டவளே

உன்னைக் காண நேரமாச்சு
காதல் போதை ஏறிப்போச்சு
விண்ணில் தோன்றும் மின்மினியே
என்னில் வாழும் கண்மணியே
பொட்டுக் கண்கள் கொண்டவளே
போதை ஏற்றிச் சென்றவளே
செங்கரும்பும் செந்தேனும் -உன்
செவ்விதழிடம் தோற்றிடுமே
பன்னீரு பார்வையாலே - என்
செங்குருதி சூடாச்சே
கள்ளிச் செடி முள்ளைக் கொண்டு - உனைக்
காணா நாட்கள் குத்துதடி
கார்கால நிறத்தாளே - எனை
கைத்தளம் பற்றுவதெப்போ?
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (17-May-19, 6:13 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 52

மேலே