நீ நுழைந்த இதயம் சிதையாதடி
கத்திரியில் மழையே
கடுங்குளிரில் அனலே
வெண் நிறத்து மலரே
வித்தியாசச் சுவையே
உச்சி முகர்ந்து கொஞ்சிடவே
உருகுதடி என் உள்ளம்
உருகுகின்ற வெண்ணெயைப் போல்
உள்ளதடி உன்னுருவம்
பாலாடைக் கட்டியால்
பல மாடி வீடுக்கட்டி - அதில்
பட்டு நிறத்தாளே உனை நான்
பாதுகாத்து வைப்பேனே
நூறு குதிரை வேகங்கொண்டு
நுண்ணியமாய் எனைத் தாக்கிணும்
நீ நுழைந்த இதயம் சிதையாதடி
நறுமணம் கொண்ட நாயகியே.
-- நன்னாடன்.