குலோத்துங்க சோழன் கோவை - நூல் - எட்டாவது - பாங்கற் கூட்டம்

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்

தலைவ னுற்ற துரைத்தல்.

(இ-ள்) அங்ஙனங் கேட்ட பாங்கனுக்குத் தலைவன் றனக்குற்ற வேறுபாட்டின் காரணத்தைக் கூறுதல்
.
கட்டளைக் கலித்துறை

கானாகத் தார்புனை தோணண்ப னேயுட் கலையனைத்துந்
தானாகச் சோர்ந்து தளரச்செய் தேதரை யேழுமொரு
கோனாகக் காக்குங் குமார குலோத்துங்கன் கோழிவெற்பின்
மானாக மொன்று விழுங்கிய தாலென் மதியையின்றே! 44

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (9-May-24, 9:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே