காதல் மடிவதில்லை
அடைமழையில் கலந்து பின்பும்
கல்லும் மண்ணும் வாசம் தூவுமே...
உன்னோடு வாழ்ந்திட தானே
மறு ஆயுள் வேண்டுமே...
மறைந்திட்ட சூரியன் கூட
மறவாமல் தோன்றுமே...
முகில் மறைத்த முழுநிலவும்
நதி நீரில் நீந்துமே...
கல்லிலே பூ மலர்ந்தாலும்
பூவாசம் கொஞ்சம் குறையுமோ...
மடி கறந்த தாய்ப்பால்
விஷம் தாங்கும் கள்ளிப்பால் ஆகுமோ...
புரிந்த விடைகளுக்கு
புரியாத வினாவாக
வாழ்வில் வந்தாயே...
எனை நீ பிரிந்தாலும்
காதல் சாய்ந்து சாகாதே...
என் அன்பே... ஆருயிரே...