மண்ணுக்குள் வாசம்

சமுதாயத்தில் எழுகின்ற
சிக்கல்கள் பலவற்றுக்கும்
சமுதாயத்தில் காணும்
ஏற்றத்தாழ்வுகள் தான்
எல்லாவற்றுக்கும் காரணம்

மக்கட்தொகையும்
மனிதத் தேவைகளும்
பெருகி வருவதால்,
நேர்மையான வழியில்
பொருளீட்டி வாழமுடியாமல்--சிலர்
மாற்று வழி தேடுகிறார்கள்

எப்படியும் வாழலாம்
என்ற நிலைக்கு வந்து
வாழ்க்கையை போராட்டமாக்கி
வாழத் துணிகிறார்கள்
வேறு வழியின்றி

பவனி வரும் இறைவனை
பலபேர் சுமப்பதுபோல்
உயிரில்லா உடலுக்கு
உறவுகள் தோள் கொடுக்கும்,
வழிகாட்டும்,--முடிவில்
மண்ணுக்குள் வாசம்

எழுதியவர் : கோ. கணபதி. (16-Jun-19, 8:19 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : mannukul vaasam
பார்வை : 110

மேலே