எனக்கு வானத்தில் பறக்க வேண்டும்

எனக்கு வானத்தில் பறக்க வேண்டும்
அந்தப் பறவைகள் போல்
அதன் நீலத்தில் காற்றோடு காற்றாய்
நீந்திட வேண்டும்
அந்தி வான அழகினை
முத்தமிட்டு வரவேண்டும்
சிறகுகளை ஏன் எனக்கு கொடுக்கவில்லை
இறைவா ?
இந்தச் சொல்லை மொழியை எடுத்துக் கொள்
இரண்டு சிறகுகளை கொடு
குயில் போல் இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு குரலைக்கொடு
பாடித் திரிவேன் வானில்
ஆம்
எனக்கு வானத்தில் பறக்க வேண்டும்
அந்தப் பறவைகள் போல் !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jun-19, 7:44 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 128

மேலே