கேட்குமா

மரங்களை வெட்டி
மனிதன்
மழையைத் தடுத்துவிட்டான்..

காட்டைக் கொளுத்தி
கொக்கின்
கூட்டைக் கலைத்துவிட்டான்..

மீன்கள் வாழும்
குளங்களைத் தூர்த்தே
மாடிவீடுகள் கட்டிவிட்டான்,
கொக்கின் பிழைப்பில்
மண்ணைப்போட்விட்டான்..

பட்டமரக் கிளையிலிருந்து
கொக்கு
பட்ட பாட்டைக்
கூறுவது
கேட்குமா மனிதன்
காதுகளில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Jun-19, 6:58 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 104

மேலே