கேட்குமா
மரங்களை வெட்டி
மனிதன்
மழையைத் தடுத்துவிட்டான்..
காட்டைக் கொளுத்தி
கொக்கின்
கூட்டைக் கலைத்துவிட்டான்..
மீன்கள் வாழும்
குளங்களைத் தூர்த்தே
மாடிவீடுகள் கட்டிவிட்டான்,
கொக்கின் பிழைப்பில்
மண்ணைப்போட்விட்டான்..
பட்டமரக் கிளையிலிருந்து
கொக்கு
பட்ட பாட்டைக்
கூறுவது
கேட்குமா மனிதன்
காதுகளில்...!