மச்சக் கண்ணாலே
மச்சக் கண்ணாலே என்னை
மயக்கிச் சென்றாளே
சொச்ச உயிரையும் கையில்
கவர்ந்து கொண்டாளே
உச்சி வகிடிலே - பொட்டாய்
இட்டுக் கொண்டாளே
உடலில் உயிராக - வந்து
ஒட்டிக் கொண்டாளே
கள்ளச் சொல்லாளே - காதலை
உண்டு பண்ணாளே
காணும் போதெல்லாம்
கவிதைக்கு கரு கொடுத்தாளே
வேண்டும் அவளென -தினமும்
நினைக்க வைத்தாளே
மகிழ்ந்து இணைந்திட நானும்
நாளை குறித்தேனே
நல்ல நாளிலே - நீங்கள்
வந்து வாழ்த்துங்கள்
நன்றாய் வாழ்ந்திட - மனசால்
நல்லாசி கூறுங்கள்.
--- நன்னாடன்.