திமிங்கலம்

விண்மீன்கள் பிடித்து
உள்ளங்கையில் அடைத்து
கானல்நீரில் கவனமாய்
நீந்தவிட்டேன்!!!!
.
துல்லியமான புருவங்களை
தூண்டிலாக கொண்டு
என் கற்பனை மீனை
களவாடிப் போகிறாய்!!
.
திமிரான திமிங்கலம் நான்
சிறு தூண்டிலாக நீ
என்ன செய்யமுடியுமென்றேன்??
இதழாழே வலைவிரித்தாய்
சிரிப்பாலே சிறைப்பிடித்தாய்!!!

......ரூபன் புவியன்.....

எழுதியவர் : ரூபன் புவியன் (30-Jun-19, 8:52 pm)
சேர்த்தது : Ruban puviyan
பார்வை : 68

மேலே