லிமரைக்கூ
தள்ளாடும் குடிகாரன் கால்கள்/
வறுமையின் பிடியில் அவன் குடும்பம்/
பசியில் மனைவி மக்கள்/
மழையில் நிறைம்பியது ஆறு/
சந்தோசமாக ஓடி நீந்தியது மீன்/
உள்ளே மறைந்தது சேறு/
ஓயாமல் ஆடுது அலை/
உதவி இன்றி படகில் மீனவன்/
கடலோடு ஆடுது வலை/
மேகத்தின் அழுகையோ மோகம்/
பூமியிலே நிறைந்து விட்டது வெள்ளம்/
என்னுள்ளே ஒரு சோகம்/
இருவருக்காக போட்ட கட்டில்/
கணவன் தொட்டான் மனைவி விட்டாள்/
இதோ வந்தது தொட்டில்/
வீதிக்கு வீதி கடை/
வரிசை கட்டி வாலிபர் கூட்டம்/
நாளை மது தடை/
தாய் தந்தை ஆசான்/
மூன்று தெய்வங்கள் சொல் கேட்டால்/
நாம் அறிவில் மகான்/

