இழப்பின் கண்ணீர்

என்னை மயானத்தில்
மாடு மேய்க்க விட்டுவிட்டு
குடமுழுக்கு தீர்த்தத்தில்
குளிக்கிறது உன் கூந்தல்
என் நிழலும் போதையில் தள்ளாட
உன் உலகம் புது உறவில் கொண்டாடுது
தென்றல் ரசித்த என் ஜன்னல்
புயலில் சிக்கி புலம்புகிறது
பூமியின் சுழற்சியே அறியாமல்
உன் பூவிழியில் தொலைந்த என் நாட்கள்
என் இதயக் குடுவையின் முழுப்பரப்பிலும்
உன் நினைவுக்கு கூடுகள் மூச்சடைக்குது
கட்டுப்பாடின்றி உன்மேல் வைத்த அன்பு
இன்று என் கட்டளைகளை காலால் உதைக்கிறது
நடைப்பிணமாக நான் நடக்க
அலங்காரங்களுடன் அங்கு ஆரவாரம் ஆர்ப்பறிக்குது
பிணமாகும் வரை இனி புலம்பல் தான் என் தாய் மொழியோ ?

எழுதியவர் : வருண் மகிழன் (12-Jul-19, 5:13 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : izhappin kanneer
பார்வை : 2436

மேலே