கவிதை

சில நேரங்களில்
உனக்கும்
எனக்குமான
மௌனம் சூழ்ந்த
இடைவெளியில்,
கொட்டிக்கிடக்கும்
வார்த்தைகளை
பொறுக்கிடுத்து,
கோர்த்து,
வரிகளாக்கி..
கவிதையென்று
கூறிக்கொள்கிறேன்.

எழுதியவர் : நிலா ப்ரியன் (12-Jul-19, 7:47 pm)
சேர்த்தது : நிலா ப்ரியன்
Tanglish : kavithai
பார்வை : 66

மேலே