நறுந்தொகை 23
அடினுமா வின்பால் தன்சுவை குன்றாது. 23
அதிவீரராம பாண்டியர்
பொழிப்புரை:
காய்ச்சினாலும் பசுவின் பால் தனது மதுரமாகிய சுவை குறையாது.
கருத்து: பசுவின்பாலை வற்றக் காய்ச்சினாலும் அதன் சுவை குறையாது (மிகும்.)
இது முதல் ஐந்து வாக்கியங்கள் பெரியோர்க்கு எவ்வளவு துன்பம் செய்தாலும் அவர்கள் தம் பெருமைக் குணத்தைக் கைவிடார் என்னும் கருத்தை அடக்கிக் கொண்டிருக்கின்றன.