என் தேவதை

வெட்கம் திறக்கவா?
ஏக்கம் பறக்கவே
பக்கம் வரட்டுமா?

பருவப்
பெண்ணொருத்தி /
இருவிழிப்
பார்வையை நிறுத்தி/
தூதொன்று விட்டாள் /

நோக்கிய விழியோ
என் கர்வம் உடைத்தது /
ஆணவம் தகத்தது /
வேகமாய் நுழைந்து/
இதயச்
சிம்மாசனம் அமர்ந்தாள் /

அன்றிருந்து
இன்று வரையிலும்/
என்னுள்ளே ஆட்சி புரியும்
தேவைதையானாள் /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (19-Jul-19, 7:53 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 257

மேலே