வீழ்ந்தேன் விழிக் குளத்தில்

புருவ வில்லெடுத்து என் பருவத்தைச் சாடினாள்
காந்தப் பார்வையால் கருத்தினை நாடினாள்
நீந்தும் கயல்களால் தினம் நினைவிலே ஓடினாள்
கனவிலும் நினைவிலும் வந்து பக்கம் கூடினாள்
நெஞ்சக் கால்கள் சேற்றில் ஆழமாய்ப் புதைய
தடுமாறி வீழ்ந்தேன் நான் அவள் விழிக் குளத்தில் ....

அஷ்ரப் அலி

எழுதியவர் : ala ali (23-Jul-19, 11:48 am)
பார்வை : 244

மேலே