குறுந்தொகை பாடல் 18

பாடல் :

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே!

பாடல் காட்சி :

இரவுக் குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு வரைவு கடாயது. - தலைவியை சந்தித்து விட்டு கிளம்பும் தலைவனை எதிர்கொண்டு தோழி சொல்வதாக இந்தப் பாடல் இருக்கிறது

இப்பாடலை எழுதியவர் : கபிலர் , 235 பாடல்கள் எழுதிய அவரை பற்றி அறிமுகம் தேவையில்லை , அதனால விளக்கம்

விளக்கம்

தோழி என்ன சொல்றங்கனா

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட - வேரல் வேலி - சிறு மூங்கிலாகிய வாழ் வேலியை உடைய, வேர்க்கோட் பலவின்- வேரிலே பழக்குலைகளை உடைய பலா மரங்கள் நிரம்பிய சாரல் நாட - பக்கத்து மலையில் உள்ள நாட்டுல இருப்பவனே

சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு - பலா மரத்தின் சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்கியதைப் போல

இவள் உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே - தலைவியின் உயிர் சிறியது , ஆசையோ மிகப் பெரியது ,


யார் அஃது அறிந்திசினோரே - இப்படி இருக்கிற நிலையை அறிந்தவர் யார் ?

இப்படி தலைவியின் நிலையை எடுத்துக் கூறி

செவ்வியை ஆகுமதி! - சீக்கிரம் கல்யாணம் பண்ணுறதுக்கு ஒரு வழியப் பாருன்னு சொல்லுவதாக இந்தப் பாடல் இருக்கிறது செவ்வியை - வரைந்து (மணம் செய்துகொள்ளும்) கொள்ளும் காலத்தை,
ஆகுமதி - உண்டாக்கு

இதுல இரண்டு சாரல் வருகிறது , தலைவினின் மலையில் பலாப்பழம் வேரிலே இருக்கிறது அதுக்கு காவலாய் மூங்கில் வேலி இருக்கிறது அதனால தலைவியின் மலையில் சிறிய கொம்பிலே தொங்கும் பெரிய பழத்தினால் கொம்பு தாங்கும் வலியை புரிந்துகொள்ள உன்னால் முடியாது , தலைவியை மணம் புரிந்துகொள் என்று சொல்வதாக பொருள் வருகிறது .

இந்த ரெண்டாவது பாடலில் , மற்ற பாடல்களிலும் கூட நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் , இயற்கையை எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதும் , அதனோடு வாழ்க்கையை பிணைத்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் தான் சங்கப் பாடல்களின் உதாரணம் இயற்கையாகவே இருக்கிறது . . நாம்தான் இயற்கையில் இருந்து மிகவும் விலகி வந்துவிட்டோம் ,

எழுதியவர் : பாவி (24-Jul-19, 6:57 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 293

மேலே