சொந்தம்

ஓடுகின்ற ஆற்று நீரை
இருகைய்யால்

அள்ளி எனக்கே சொந்தம்
என நினைக்க

விரலிடுக்கில் வழிந்து சில
நிமிடத்தில்

வெறுங்கை ஈரம் கூட
காய்ந்ததே

போனால் போகட்டும் இனி

சொந்தமென எதுவுமில்லை
என

ஓடும் நீரில் கால்கழுவி
வந்து விட்டேன்..,

எழுதியவர் : நா.சேகர் (30-Jul-19, 8:57 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : sontham
பார்வை : 2052

மேலே