என்னில் நீ
எடுத்தாயா? கொடுத்தாயா?
எனக்குள் உன்னை விதைத்தாயா?
தொடுத்தாயா? முடித்தாயா?
வெகுதூரம் என்னை அழைத்தாயா?
கொதித்தாயா? குளிர்ந்தாயா?
எரிகுழம்பாய் என்னில் புதைந்தாயா?
பிறந்தாயா? வளர்ந்தாயா?
என்னில் பிள்ளைப்பருவம் பயின்றாயா?
- மீனாள்செல்வன்