முள்ளி வாய்க்கால் சுவடுகள்

முல்லி வாய்க்கால்
போர் பலருக்கு/
கொள்ளி வைக்க
வைத்து திட்டது./
உறவுகளை தொலைத்து
உணர்வுகளை பறித்து /
உள்ளத்தால் நொந்து
இரத்த வெள்ளத்தில் /
துவைந்து துன்பத்தில்
துவண்டு வாழவைத்ததே /
நீர் ஓடிய ஓடை எங்கும் /
செங்குருதியும்
சேர்ந்து ஓட விட்டதே /
உண்ண உணவின்றி
உறங்க இடமின்றி /
பதுங்கு குழியில்
இறங்க வைத்ததே /
சொத்து இழந்து சுகம் இழந்து /
பெற்ற பிள்ளைகளையும்
சேர்த்து இழந்து /
ஈழமண் மீட்பு கனவாய் போனதே /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (12-Aug-19, 12:49 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 45

மேலே