நட்பு
கொடுத்தது கிடைத்ததா என்ற
கூட்டல் கழித்தல் இங்கில்லை
அகத்தினழகு முகத்திற் தெரியுமென
அகமோ புறமோ இரண்டில்லை
குற்றங் காணில் இடித்துரைக்கும்
குணத்திற்கின் னொரு நிகரில்லை
துன்பம் வந்தால் ஓடிவரும்
துணைக்குத் தெய்வமும் இணையில்லை!
- மீனாள்செல்வன்