அஷ்டாக்ஷரம்

தொட்டு சுகம் காணலாம் அழியும்
அழகும் அதைக் கூட்டும் இளமையும்
உன்மத்தத்தில் உன்னை ஆழ்த்தி ஆளும்வரை
அழகு கரைந்து இளமையும் கழிந்து
மூப்பில் எலும்பும் தோலுமாய் உருமாறினாலும்
உலப்பிலா ஆனந்தும் தருமே எப்போதும்
நமோ நாராயணா எனும் அஷ்டாக்ஷரம்
நாவில் வந்து நீ உரைக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Aug-19, 11:15 am)
பார்வை : 99

மேலே