அம்புப் படுக்கையினில்

இச்சைபோல் சாவுவரம் பெற்றகங் கைமைந்தன்
இச்சை யிலாவிரதன் அம்புப் படுக்கையில்
நற்தருமன் சாத்திரம் கேட்க திருமாலும்
பொற்திரு நாமம்கேட் டான் .

இச்சையிலான் ஆயிரம் சொல்லி முடிக்கவும்
இச்சையி லேற்றான்அச் சாவு !

இச்சையில் சாகத்தந் தைவரம் தந்தது
இத்தரைப் போரினில் மாண்டு முடியுமுன்
அச்சுதனைப் பாடிட வோ . ?

எழுதியவர் : கவின் சாரலன் (3-Sep-19, 11:37 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே