விபத்து

அசாதாரண சூழல்
ஒரு நெடுஞ்சாலையில்
போக்குவரத்து ஆமை வேகத்தில்
நகர்ந்தது

அப்போது தான்
நடந்திருக்கும்போல
ஆங்காங்கே பழங்கள்
சாலையில் சிதறி இருந்தது
விழுந்து கிடந்த
இருசக்கர வாகனத்தின்
ஒரு சக்கரம் சுழன்று கொண்டே
இருந்தது

தலை கவசம் அணியாத
ஒரு ஜீவன் சாலை விபத்தில்
தன் கடைசி சுவாசங்களை
சுவாசித்து கொண்டிருந்தது

பார்த்த நபர்களில் சிலர்
அய்யோ பாவம்
யார் பெற்ற பிள்ளையோ என்றனர்
சிலர் அவசர வாகனத்துக்கு
ஃபோன் செய்யுங்கள் என்றனர்
சிலர் வேடிக்கை பார்த்து நகர்ந்தனர்

எல்லா கோணங்களில்
புகைப்படமெடுத்து காட்சி பிழையின்றி
புலனத்தில் பதிவேற்றி
விபத்தை விளம்பரம் செய்தனர் இன்னும் சிலர்

வாழ்க்கை இப்படித்தான்
நகர்கிறது
நரக நகரத்தில்
நாமுண்டு நம் பிழைப்புண்டு என்று...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (6-Sep-19, 5:38 am)
Tanglish : vibathu
பார்வை : 84

மேலே