இருட்டு எனக்கு பிடிக்கும்
உன் இருண்ட கருவறையில் இருக்க நான் என்றும் அஞ்சியதில்லை
ஆனால் இன்று,
வெளிச்சம் கண்டும் அஞ்சுகிறேன்
கல்லறைக்கு நீ சென்றுவிட்டதால்
அம்மா...
மீண்டும் உன் கருவறைக்குள்
வந்துவிட வழி சொல்லு
இல்லையென்றால் என்னையும்
உடன் அழைத்துச்செல்லு..!