நாகரிக ஆடைகள் 555
![](https://eluthu.com/images/loading.gif)
ஆடை...
சாலையோரம் செல்லும்
போது ஆடவரின் பார்வை...
ஆடையைமீறி
பார்த்துவிடக்கூடாது...
உள்ளேயும் அணிந்தார்கள்
உள்ளாடைகள்...
நாகரிக பெண்களின் ஆடைகள்
சிலருக்கு உள்ளாடைகள் மட்டுமே...
சாலையில் ஆடவரை
மிஞ்சிச்செல்லும் நாகரிக பெண்கள்...
ஆடவரின் பார்வை
அவளின் மேனியின்மீது...
ஆடவரின் பார்வை பட்டால்
கற்பு போய்விடுமா என்கிறாள்...
நாகரிக
பெண் ஒருத்தி...
ஆம்...
நூறுமுறை கண்ணாடிமுன்
ஆடையை சரிசெய்தாலும்...
சாலையில் ஆடவர்களை கண்டதும்
மீண்டும் ஒருமுறை சரி செய்கிறாள்...
அவளிடம் கேள் கற்பின்
பெருமையை சொல்வாள்...
ஆடவன் காதலை சொன்னால்
முகம்
மறைத்து வெட்கம் கொள்கிறாளே...
அவளிடம் கேள் கற்பை
பற்றி சொல்வாள்...
ஆடையில் ஆங்காங்கே கிழிசல்
இருந்தால் நாகரீகமாம்...
ஏழை சிறுவன் அணிந்திருந்தாள்
கேவலமான பார்வை...
ஆடை மேனியை
மறைப்பதற்க்கே...
ஆடவனின் பார்வையை
மேனியில் படரவிடுவதற்கு அல்ல.....