நான் = நீ

என்னுளம் கேள்
உன்னுளம் தா!
மாலைகள் மாற்று
மகுடமும் மாற்று!
தோளோடு நில்
தோளோடும் கொள்!
இமைகளாய் இரு
என் பார்வையை மதி!
உனக்குள்ளும் கொள்
ஒதுங்கியும் நில்!
புதிதான சுகங்கள்
புரிந்திட விரும்பு!
புதிதான வலிகள்
புரியவும் பழகு!
சுமையொன்று கொடுத்தால்
சுமையொன்று இறக்கு!
பாதைகள் ஒன்றே
பயணமும் ஒன்றே!
சரிநிகர் செய்தால்
சாதனை நமதே!

எழுதியவர் : மீனாள்செல்வன் (18-Sep-19, 5:43 pm)
சேர்த்தது : மீனாள்செல்வன்
பார்வை : 255

மேலே