கவிதை பெறுவாள் புன்னகையாள்

பா :
முகஎழில் நிலவினில் கருங்கூந்தல் கலைந்தாட
பகலொளி விரிகாலையில் பால்வாங்க வருகிறாள்
நிகரிலாள் அழகில் என்சாளரம் கடக்கிறாள்
புகழ்த்தமிழ்க் கவிதை பெறுவாள் புன்னகையாள் !

ஒ வி வெண்பா :

முகஎழில் பூநிலவில் கூந்தல்நன் காட
பகலொளி காலையில் பால்வாங்க வந்தாள்
நிகரிலாள் சாளரத் துக்கப்பால் போனாள்
புகழ்த்தமிழ்ப்பா டல்பெறு வாள்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Sep-19, 10:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே