மெழுகாய் உருகும் என் உள்ளம் 555
ப்ரியமானவளே...
உளியின் வேகத்தையும்
அது
ஏற்படுத்தும் காயத்தையும்...
தாங்கிக்கொள்ளும் பாறைதான்
ஒரு சிற்பமாக உருமாறும்...
நான் பாறையாக
இருந்திருந்தால்...
நீ ஏற்படுத்திய
காயத்திற்கு...
நான் சிற்பமாக
உருமாறி இருப்பேன்...
நானும் என் இதயமும்
பாறை இல்லையடி...
நானும் என் இதயமும்
பாறை இல்லையடி...
மனிதபிறவி
அதனாலதான் என்னவோ...
மெழுகாய் உருகிக்கொண்டு
இருக்கிறேன்...
உன் பிரிவை நினைத்து...
மெழுகாய் உருகிக்கொண்டு
இருக்கிறேன்...
உன் பிரிவை நினைத்து.....