வலிகள் இல்லாத கனவு சுகம்தானடி 555

என்னவளே...


எனக்கு பிடித்த உனக்காக

என் புன்னகையை தொலைத்தேன்...


உனக்கு பிடித்தவருக்காக
நீ
என்னையே தொலைத்தாய்...


நிஜத்தில் உன்னை
நினைத்து
ஏங்குவதைவிட...


கனவில் உன்னுடன்

வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்...


இரவுநேர கனவுகளுக்கு

வலிகள் இல்லை...


நீயும் என்னை

விலகிச்செல்வதில்லை...


நான் நினைப்பதெல்லாம்

எளிமையாக நடக்கிறதே...


நொடிகூட நீ

என்னைவிட்டு பிரியாமல்...


நாம் சேர்ந்தே வாழ்கிறோம்

தினம் தினம் கனவில்...


நிஜத்தைவிட கனவு

எனக்கு சுகம்தானடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (9-Oct-19, 3:40 pm)
பார்வை : 694

மேலே